ராஜபாளையத்தில் ராணுவ வீரர் தனக்குதானே கத்தியால் குத்தி தற்கொலை!!
ராஜபாளையம் அழகை நகரை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது32). ராணுவ வீரரான இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அருணாச்சலம் விடுமுறை எடுத்துக் கொண்டு நேற்று தனது சொந்த ஊருக்கு வந்தார். வீட்டில் இருந்த அருணாச்சலம் திடீரென்று கத்தியை எடுத்து தனக்குதானே சரமரியாக குத்திக் கொண்டார்.
அப்போது வீட்டில் இருந்த அவரது தம்பி மாரிமுத்து அண்ணனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரையும் அருணாச்சலம் கத்தியால் குத்தினார்.
தனக்கு தானே கத்தியால் குத்தி கொண்டதில் அருணாச்சலம் குடல் சரிந்து சிறிது நேரத்தில் பலியானார். காயம் அடைந்த மாரிமுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Average Rating