உல்லாசமாக இருக்க அழைத்து சென்று பெண்ணை கொலை செய்தேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்!!

Read Time:4 Minute, 31 Second

c0482afa-24be-4b91-b288-dc899e5365ab_S_secvpfவிருதுநகர் மேலரதவீதி அண்ணாமலை சந்தையை சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது33). கடந்த 2–ந்தேதி இவர் தனது வீட்டில் ஒரு பெண்ணை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெங்கராஜன் தனது மனைவி கோமதியை அடித்துக் கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி வைத்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெங்கராஜனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஆறுமுகம்(31) என்பவரையும் கைது செய்து காவலில் வைத்தனர். இந்த நிலையில் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இவ்வழக்கில் விசாரணை நடத்திய போது கோமதி உயிருடன் இருப்பது தெரிய வந்தது. அவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சித்தாளம்பட்டியில் தனது தாத்தா தங்கராஜுடன் வசித்து வருவது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் கொலையுண்ட பெண் யார் என மேல் விசாரணை தொடங்கினர். அப்போது கொலை நடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி செல்வி (45) மாயமானது தொடர்பாக பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து போலீசார் கொலையுண்ட பெண்ணின் உடலில் இருந்து கைப்பற்றிய நகைகளையும், உடையையும் செல்வியின் மகள்களிடம் காட்டிய போது அவர்கள் இருவரும் அந்த ஆடையும், நகைகளும் தங்களது தாயார் செல்வியின் உடையது தான் என்பதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் ரெங்கராஜனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்து அனுமதி கோரி விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ப்ரீத்தா நேற்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ரெங்கராஜனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதித்தார். அதன்படி போலீசார் ரெங்கராஜனை மாலை 4 மணிக்கு காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இரவு 9 மணிக்கு விசாரணை முடித்து ரெங்கராஜனை மாஜிஸ்திரேட்டு ப்ரீத்தா முன்பு ஆஜர்படுத்தி அவரது உத்தரவின் பேரில் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

ரெங்கராஜனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது, முதலில் தனது மனைவியைத்தான் கொலை செய்தேன் என சொல்லிக் கொண்டிருந்த ரெங்கராஜன் பின்னர் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தியதில் பஸ் நிலையத்தில் இருந்து உல்லாசமாக இருக்க செல்வியை அழைத்துச் சென்றதாகவும், முதல் நாள் ரூ.500 பணம் கொடுத்ததாகவும், 2–வது நாள் ரூ.1000 கேட்டு அவர் தகராறு செய்ததாகவும், அப்போது செல்வியை கீழே தள்ளியதில் அவர் தலையில் அடிபட்டு மயங்கிய உடன் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி வைத்ததாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கொலையுண்ட பெண்ணின் உடலை புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி மறு பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளை காதலித்த வாலிபரை வெட்டிக் கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு!!
Next post காதலியிடம் ஆபாச படம் காட்டி செக்ஸ் தொல்லை: வாலிபரிடம் போலீசார் விசாரணை!!