மகளை காதலித்த வாலிபரை வெட்டிக் கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு!!
திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே வடுகர்பேட்டை வி.டி. காலனியை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன். இவருக்கும், கரோலி என்ற பெண்ணுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் இருந்த கோபாலகிருஷ்ணன் வடுகர்பேட்டை தேரோடு தெற்கு வீதியை சேர்ந்த ஜான்கென்னடி என்பவரது மகள் ஜேஸ்மினுடன் பழகி காதலித்தார். அவரை 2 வது திருமணம் செய்யவும் திட்டமிட்டதாக தெரிகிறது.
இது பற்றி அறிந்த ஜான்கென்னடிக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து கடந்த 3.10.2011ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற கோபால கிருஷ்ணனை வழிமறித்து அரிவாளால் ஜான் கென்னடி வெட்டியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார். இது பற்றி கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜான்கென்னடியை திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் குற்றவாளியான ஜான்கென்னடிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1500 அபராதம் விதித்து நீதிபதி உத்திராபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அசோகன் ஆஜராகி வாதாடினார்.
Average Rating