சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நள்ளிரவு 12 மணிவரை பரபரப்பை ஏற்படுத்திய பெண்!!
Read Time:1 Minute, 19 Second
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சர்மிளா. இவர் முதுகு தண்டவட பிரச்சினை காரணமாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவர் நேற்று மாலை 6 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தியாகிகள் ஸ்தூபி திட்டில் படுத்து கொண்டு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை அளிப்பதில்லை என்று கூறி ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர் கேட்காமல் தொடர்ந்து பேசி கொண்டே இருந்தார். நள்ளிரவு 12 மணி வரை யார் சொல்லியும் கேட்க மறுத்து இங்கேயே படுத்து கொண்டு இருந்தார். பின்னர் அவர் புறப்பட்டு சென்று விட்டார். இதனால் பரபரப்பு நிலவியது.
இதே போல் நேற்று முன் தினமும் இவர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து பிரச்சினை செய்தார்.
Average Rating