கிழக்கின் விடிவெள்ளிகள்….
பிரபாகரனின் அடக்குமுறையை முறியடிக்க வீறுகொண்டெழுந்த எங்கள் சாதணைத் தலைவன் கருணாஅம்மான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அணிதிரண்டு அடக்கியாளப்பட்ட எமது மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காய் அர்ப்பணிப்புடன் உயர்ந்த இலட்சியங்களை சுமந்து அடக்குமுறைக்கும், ஆக்கிரமிப்பிற்கும், சர்வாதிகாரத்திற்கும் எதிராய் கண்களில் அனல் கொண்டு சீறிஎழுந்து எமது மக்களின் தன்மானம் காத்து தனித்துவத்துடன் போராட போர்க்களம் புகுந்த தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் முதன்நிலைத் தளபதி பிள்ளையான், மூத்ததளபதி ஜெயம், இராணுவத்தளபதி மார்க்கன், தளபதி சின்னத்தம்பி, அரசியல்பொறுப்பாளர் பிரதீப் மற்றும் பொறுப்பாளர்களான மங்களன், து}யவன், றீகசீலன், இசையாளன், சிந்துஜன், பாரதி, சீலன், மகிழன் ஆகிய இவர்கள் அணைவருமே கிழக்கு மண்ணின் விடிவெள்ளிகளே. எம்மக்களின் விடிவுக்காய் எம்மண்ணை ஆக்கிரமித்துள்ள பிரபாகரனின் கூலிப்படைகளை வோரோடு களையெடுக்கும் வரை இவர்கள் அர்ப்பணிப்புடனும் உத்வேகத்துடனும் தொடர்ந்தும் போராடுவர். இவர்கள் சிந்தும் குருதியாலும், இவர்களின் தியாகத்தாலும் எமது மண்ணை ஆக்கிரமித்திருக்கும் வன்னிப்புலிகளைத் துரத்தியடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அந்த நாள் தமிழர் சரித்திரத்தில் விரைவில் உதயமாகும். அன்றைய தினத்தில் எம்மக்களும், மண்ணும் சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளாக மக்கள் மனங்களிலும், வரலாற்றிலும் எழுதப்படும்.
Thanks…. WWW.ATHIRADY.COM