குடும்பம் நடத்த வர மறுப்பு: மனைவியின் முகத்தை பிளேடால் கிழித்த கணவன் கைது!!
Read Time:59 Second
காசிமேடு திடீர் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி மாலதி. இவர் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கடந்த 6 மாதமாக புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பாரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார்.
இந்த நிலையில் மாலதியை குடும்பம் நடத்த வருமாறு குணசேகரன் அழைத்தார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த குணசேகரன் பிளேடால் மாலதியின் முகம், கழுத்து, கையை கிழித்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த மாலதிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர்.
Average Rating