சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டம் நிறைவேற்றம் – த.தே.கூ மகிழ்ச்சி!!
Read Time:1 Minute, 4 Second
சாட்சியாளர்கள் மற்றும் குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சி வௌியிட்டுள்ளது.
பாதுகாப்பு பற்றிய உறுதி இல்லாமையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள் தமது சாட்சியங்களை வழங்க முன்வரவில்லை என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த சட்டமூலமானது கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating