8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்: தேடிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த கிராம மக்கள்!!
Read Time:1 Minute, 3 Second
உத்தரப்பிரதேச மாநிலம் முஜாரியா கிராமத்தில் கடந்த வெள்ளி அன்று வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபரால் மறைவான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.
இதனால் கொதிப்படைந்த கிராம மக்கள் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து இந்த கொடூர செயலை செய்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இச்சம்பவத்தில் ஈடுபட்ட 35 வயதான விஜய் யாதவை கண்டுபிடித்த மக்கள், தங்கள் ஆவேசம் தீரும் வரை அவனை அடித்து உதைத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்.
யாதவ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating