களக்காட்டில் காதலியை கடத்தி கற்பழித்த கட்டிட தொழிலாளி கைது!!

Read Time:3 Minute, 40 Second

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). 9–ம்வகுப்பு வரை படித்துள்ள இவர் களக்காட்டில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 13–ந்தேதி வேலைக்கு சென்ற செல்வி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவரது தந்தை களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வி எங்கு சென்றார்?, யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி தேடிவந்தனர். விசாரணையில் செல்வியை அவரது காதலன் தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மாரிசெல்வம் (27) கடத்தி சென்று திருமணம் செய்துள்ளதும், அவர்கள் மதுரையில் தனிக்குடித்தனம் நடத்தி வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மதுரை சென்று காதல் ஜோடியை மீட்டனர்.

மீட்கப்பட்ட செல்வி தூத்துக்குடி முத்தையா புரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த மாரிசெல்வத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.

இதையறிந்த செல்வியின் உறவினர்கள் அவரை களக்காடுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது பெற்றோர் செல்வியின் படிப்பை நிறுத்திவிட்டு ஜவுளி கடைக்கு வேலைக்கு அனுப்பினர். இருப்பினும் அவர் மாரிசெல்வத்துடனான பழக்கத்தை கைவிடவில்லை. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர். இதனால் செல்வியை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

இதுகுறித்து செல்வி, தனது காதலனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கடந்த 13–ந்தேதி களக்காடுக்கு வந்து செல்வியை அழைத்து சென்றார். பின்னர் முத்தையாபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்த அவர்கள், மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் மீட்டனர். செல்விக்கு திருமண வயது ஆகாததால் அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக மாரிசெல்வம் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட செல்வியை களக்காடு பத்மனேரியில் உள்ள மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர். காதலியை கடத்தி கட்டிட தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எழும்பூர் கொலையில் துப்பு துலங்கியது: கணவரை கொன்ற ரவுடியை தீர்த்துக் கட்டிய மனைவி கைது!!
Next post பேய் பிடித்ததாக சொல்லி பெண்மணியை சூடு போட்டு கொன்ற ஏழு பேர் கைது!!