ஜோலார்பேட்டையில் ரெயில் முன் பாய்ந்து சென்னை என்ஜினீயர் தற்கொலை!!
Read Time:1 Minute, 7 Second
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 35). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் என்ஜினீயராக பணி புரிந்து வந்தார். அவருக்கு ஹேமாமாலினி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
நேற்று வேலைக்கு செல்வதாக சொல்லி விட்டு, ஜெகதீஷ் வீட்டை விட்டு புறப்பட்டார். இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகில் ஓடும் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, சப்–இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் வழக்கு பதிவு செய்து, ஜெகதீஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating