சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு….!!

Read Time:2 Minute, 4 Second

soundரஜினிகாந்த்-லதா தம்பதிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று 2 மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுசை திருமணம் செய்திருக்கிறார். இது பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் ஆகும். தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா, ‘3’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். இப்போது அவர், ‘வை ராஜா வை’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010-ம் வருடம் செப்டம்பர் 3-ந் தேதி, சென்னையில் திருமணம் நடந்தது. இது, இரண்டு பேர் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்.

சவுந்தர்யா அஸ்வின், ‘கிராபிக்ஸ்’ வடிவமைப்பாளராக திரையுலகுக்கு அறிமுகமானார். வெங்கட்பிரபு டைரக்டு செய்த ‘கோவா’ படத்தை சொந்தமாக தயாரித்தார். பின்னர் தனது தந்தை ரஜினிகாந்தை வைத்து, ‘கோச்சடையான்’ என்ற படத்தை டைரக்டு செய்தார். சவுந்தர்யா இப்போது, ஈராஸ் என்ற பட நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை அதிகாரியாக இருந்து வருகிறார்.

அவர் இப்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவருடைய வளைகாப்பு நிகழ்ச்சி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் நடந்தது. சவுந்தர்யா-அஸ்வின் இரண்டு பேர் குடும்பங்களை சேர்ந்த நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்டர்நெட்டில் பரவும் ஆபாச வீடியோ!!
Next post காதலுக்கு எதிர்ப்பு: மகளை மன நோயாளியாக்கிய பெற்றோர்!!