சிவகங்கை அருகே தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: 2 பேர் கைது!!
சிவகங்கை அருகே உள்ள அல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசி (வயது 21 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகின்றது. ஆனால் குழந்தை இல்லை.
இந்த நிலையில் இவரை சந்தித்த இவரது உறவினரான எழுவன்கோட்டையைச் சேர்ந்த விஸ்வநாதன் (52) என்பவர் தோஷம் கழிக்க பூஜை செய்தால் குழந்தை பிறக்கும் என அவரிடம் கூறி உள்ளார். சம்பவத்தன்று அவரும் நானாகுடி என்ற கிராமத்தை சேர்ந்த செபஸ்திராஜ் என்பவரும் சேர்ந்து அல்லூர் கிராமத்திற்கு வந்து இரவு இளவரசியின் வீட்டில் வைத்து பூஜை செய்துள்ளனர். பின்னர் தனியாக அவரை தோஷம் கழிப்பதாக கூறி அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை இருவரும் கற்பழித்துள்ளனர். இது குறித்து கற்பழிக்கப்படட அந்த பெண் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமாரி வழக்குப் பதிவு செய்து செபஸ்திராஜையும், விஸ்வநாதனையும் கைது செய்தார்.
Average Rating