கோவையில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி!!

Read Time:1 Minute, 22 Second

7b544d4e-8b72-472b-a7fb-e74bd0cdcfbf_S_secvpfகோவை மாவட்டம் வால்பாறை குருமலை எஸ்டேட்டை சேர்ந்தவர் அன்புச் செல்வம். இவரது மகன் ஆனந்த் (வயது 36). இவர் கோவை கிணத்துக்கடவில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு உதவியாக இவரது தங்கை வசந்தா உடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் வசந்தா அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரை சிகிச்சைக்காக ஆனந்த் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வசந்தாவை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். வழியிலேயே வசந்தா பரிதாபமாக இறந்தார்.

அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடநாடு அருகே பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!!
Next post புரசைவாக்கத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் சிக்கினார்!!