கண்களை கட்டிக்கொண்டு ஸ்கேட்டிங்: பந்துகளை கைகளால் தட்டிக்கொண்டே 2 கி.மீ. தூரம் சென்று மாணவி சாதனை!!

Read Time:1 Minute, 53 Second

9ec634f8-5ccb-41f1-bd4b-6dbb65930c85_S_secvpfமதுரை தெப்பக்குளம் மீனாட்சி பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருபவர் யோகஸ்ரீ (வயது 13). இவர் கண்களை கட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் மூலம் கூடைப்பந்துகளை கைகளால் தட்டியவாறு செல்ல திட்டமிட்டார்.
இந்த சாதனைக்கு மதுரையில் உள்ள ஸ்பிரிட் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் டிரஸ்ட் ஏற்பாடு செய்தது. அதன்படி இன்று காலை மதுரை காமராஜர் சாலையில் உள்ள சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து கீழவாசல் வரை சாதனை பயணத்தை அவர் தொடர்ந்தார்.

முன்னாள் எம்.பி. ராம்பாபு இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து மாணவி யோகஸ்ரீ ஸ்கேட்டிங் செய்தவாறு 2 பந்துகளை கைகளால் தட்டிக்கொண்டே சென்றார். சுமார் 2.2. கிலோமீட்டர் தூரம் அவர் சென்று இந்த சாதனையை படைத்தார்.

இந்த சாதனை குறித்து மாணவி யோகஸ்ரீ கூறுகையில், எனது சகோதரி சிவஸ்ரீ இதேபோல் கண்களை கட்டாமல் சென்று சாதனை படைத்து லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதனால் எனக்கும் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

இதற்காக கடந்த 15 நாட்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டு இன்று சாதனை முயற்சியில் இறங்கி னேன். வருங்காலத்தில் பி.டி.உஷா போல் புகழ்பெற வேண்டுமென்பதே எனது ஆசை என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜீரோ சைஸ் படத்தில் அனுஷ்கா இரு கெட்-அப்!!
Next post கணவர் தியாகுவுக்கு எதிராக கவிஞர் தாமரையின் தர்ணா போராட்டம் வேளச்சேரிக்கு மாற்றம்!!