பஞ்சாப் எல்லையருகே ரூ. 50 கோடி போதைப்பொருள் பிடிபட்டது!!
Read Time:1 Minute, 10 Second
இந்தியா- பாகிஸ்தான் எல்லையோரம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கிராமமான டோட்டாவில் இன்று கேட்பாரற்று கிடந்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை எல்லை பாதுகாப்பு வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இப்பகுதியில் இன்று வழக்கம்போல் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து சென்றிருந்தபோது இந்திய எல்லைக்குள் சுமார் 80 மீட்டர் தூரத்தில் ஒரு மர்மப்பை இருப்பதை கண்டனர். அந்தப் பையை எடுத்து திறந்து பார்த்தபோது, உள்ளே 10 பாக்கெட்களில் 10 கிலோ ஹெராயின் இருப்பது தெரியவந்தது.
அவற்றை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் இன்று பிடிபட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என்று தெரிவித்துள்ளனர்.
Average Rating