குற்ற செயல்களில் ஈடுபடும் வாலிபர்களின் பெற்றோர் உறவினர்கள் மீது நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை!!

Read Time:1 Minute, 25 Second

c5ebee87-cf50-4546-8707-19d70dff6346_S_secvpfபுதுவை கோரிமேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகள்– பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பைரவசாமி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்– இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் 50–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பைரவசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவையில் இளைஞர்கள் அதிக அளவில் குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் பணம் மற்றும் மதுவுக்கு ஆசைப்பட்டு குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டிக்க வேண்டும். அதை அவர்கள் கேட்காவிட்டால் அவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

குற்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டால் இளைஞர்கள் மீது மட்டும் அல்ல அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குன்னூர் கருவூலத்தில் மோசடி செய்த 5 அதிகாரிகளுக்கு 1½ ஆண்டு தண்டனை!!
Next post பலாத்காரத்தின் போது அமைதியாக இருந்திருந்தால் டெல்லி மாணவி செத்திருக்க மாட்டாள்: சிறைக்குள் காமுகனின் ஆணவ பேட்டி!!