தூத்துக்குடியில் 162 புதுப்பட சிடி-க்கள் பறிமுதல்: கடை உரிமையாளருக்கு வலைவீச்சு!!

Read Time:1 Minute, 33 Second

89910555-4cab-4d46-a934-9dd2f3d716e1_S_secvpfதூத்துக்குடி பகுதியில் புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.துரை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து மாநகர் பகுதி முழுவதும் போலீசார் சி.டி.கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வி.இ.ரோட்டில் உள்ள பிரபல ஓட்டல் காம்ப்ளக்சில் அமைந்துள்ள சி.டி. கடையில் சோதனையிட சென்றனர்.

அப்போது அந்த கடை உரிமையாளர் அன்சாரி போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து போலீசார் கடையில் சோதனை நடத்திய போது அங்கு அனேகன், சண்டமாருதம் உள்பட பல்வேறு புதுப்படங்களின் சி.டி.க்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சி.டி.க்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 162 சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனி அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!
Next post மங்களம் அருகே இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் அடித்துக்கொலை!!