தேனி அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!
Read Time:1 Minute, 3 Second
தேனி அருகே நல்லக்கருப்பன்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 25) என்பவருக்கும் நல்லகருப்பன்பட்டியில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர்கள் தேவதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் திருமண வீட்டுக்கு விரைந்தனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தினர்.
மணப்பெண்ணுக்கு சட்டப்படி திருமண வயது பூர்த்தி அடையவில்லை. வயது பூர்த்தி அடைந்த பின்னர்தான் திருமணம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதன்படி நேற்று நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
Average Rating