உயரழுத்த மின்சாரம் தாக்கி மாமியார்-மருமகள்கள் பரிதாப பலி!!
Read Time:1 Minute, 1 Second
உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் மாவட்டத்தில் உயிர்ப்புடன் கூடிய உயரழுத்த மின்கம்பியை தொட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் ஹஸ்வார் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் பானுமதி(55) மற்றும் அவரது மருமகள்களான சுனிதா(37), சுமித்ரா(32) ஆகியோர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் படுகாயமடைந்த ரீனா என்ற 13 வயது சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்துக்கு காரணமான மின்சார வாரிய ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating