ராணுவ முகாமில் சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!
Read Time:1 Minute, 17 Second
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர் ஒருவர் முகாமில் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மேற்கு சிங்பம் மாவட்டம் சக்ரதார்பூர் சப்-டிவிஷனில் உள்ள ராணுவ முகாமில் துணை ராணுவப்படையைச் சேர்ந்த 60 வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இவர்களில் ஒருவரான ரஞ்சன் குமார் என்ற வீரர், இன்று காலை தனது சர்வீஸ் துப்பாக்கியால் திடீரென சுட்டுக் கொண்டு இறந்ததாக போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
முகாமாவில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றிய ரஞ்சன் சுமார், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் சக்ரதார்பூர் முகாமிற்கு இடமாறுதல் ஆகி வந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது சாவுக்கான காரணம் குறித்து விசரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் சக ராணுவ வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Average Rating