வரன் தேடும் தமிழக பெண் என்ஜினீயரின் வலைப்பக்கத்தால் பரபரப்பு!!

Read Time:3 Minute, 1 Second

0ed5991d-4354-4c90-b566-5ac37aa802dd_S_secvpfதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறியது அந்தக்காலம். திருமணங்கள், திருமண இணையதளங்களில் நிச்சயிக்கப்படுகின்றன என கூறுவது இந்தக்காலம்.

பெங்களூருவில் என்ஜினீயராக வேலை பார்க்கிற 24 வயது இந்துஜாவிற்கு, சேலத்தில் வசிக்கிற பழமைவாதிகளான அவரது பெற்றோர், முன்னணி திருமண இணையதளம் ஒன்றில் வரன் தேடி சமீபத்தில் விளம்பரம் வெளியிட்டார்கள்.

மணமகன் தேடி வெளியிடப்பட்ட அந்த விளம்பரம் அவரை பாதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரே ஒரு விளம்பரத்தை வலைப்பக்கமாக வடிவமைத்தார். தான் எப்படிப்பட்டவர் என்றும், தனக்கு வரக்கூடிய வரன் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது பற்றியும் அனைத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த வலைப்பக்கத்துக்கு விசாரணைகள் வந்து கொண்டே இருக்கின்றனவாம். உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும்தான். மூன்றே வாரத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் அவரது வலைப்பக்கத்தை பார்த்திருக்கிறார்கள். இவர்களில் 11 ஆயிரம் பேர் ‘லைக்’ போட்டு இருக்கிறார்கள்.

அப்படி அவர் என்ன தான் வலைப்பக்கத்தை உருவாக்கி விட்டார் என்கிறீர்களா? அதன் சாராம்சம் இதோ…

நான் மது அருந்த மாட்டேன்.. புகை பிடிப்பதை வெறுக்கிறேன்.. பேட்மிண்டன் விளையாடுவேன்.. ஆடுவேன்.. பாடுவேன்… கருப்பு கண்ணாடி அணிவேன்.. கஞ்சக்காரி அல்ல… ஷாப்பிங் அடிமையும் அல்ல. நட்புடன் பழகுவேன்.. ஆனால் நட்புக்கு முக்கியத்துவம் தரமாட்டேன்.. நான் திருமணத்துக்கான விளம்பரப் பொருள் அல்ல… வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்… இப்படி போகிறது, அவரது அறிமுகம்.

அவருக்கு எப்படிப்பட்ட வரன் வேண்டுமாம்?

குறுந்தாடி வைத்திருக்க வேண்டும்… அவருக்காக சம்பாதிக்க வேண்டும்… குழந்தைகளை வெறுப்பவருக்கு முன்னுரிமை… 30 நிமிடமாவது கலந்துரையாட தகுந்தவராக இருக்க வேண்டும்… இப்படி பல நிபந்தனைகளை விதித்து இருக்கிறார்.

ஆன்லைனில் இந்த வலைப்பக்கம் இப்போது மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திகார் சிறையில் கற்பழிப்பு குற்றவாளியிடம் பேட்டி: போலீஸ் வழக்கு பதிவு!!
Next post ராணுவ முகாமில் சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!