மகனது மாமிசத்தை தாய்க்கு உணவாக கொடுத்துவிட்டு கொக்கரித்து சிரித்த ஐ.எஸ் மிருகங்கள்!!

Read Time:2 Minute, 8 Second

sonfood_isis_003இளம் வயது வாலிபரை கொன்ற தீவிரவாதிகள், மாமிசங்களை சமைத்து அவனது தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரித்தானியாவின் மேற்கு யார்ஷயரைச் சேர்ந்த யாசிர் அப்துல்லா என்பவர் ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக ஈராக் சென்றுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தகவலில், ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கைச் சேர்ந்த குர்து இன வாலிபர் ஒருவரை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொசுல் நகருக்கு கொண்டு சென்றனர்.

மொசுல் நகரில் வைத்து அந்த வாலிபரை தீவிரவாதிகள் கொன்றுவிட்டனர். இந்நிலையில் அவரின் வயதான தாய் மொசுல் நகருக்கு வந்துள்ளார்.

அவர் தீவிரவாதிகள் இருக்கும் இடத்திற்கு சென்று தனது மகனை விடுவிக்குமாறு கெஞ்சியுள்ளார். அதற்கு தீவிரவாதிகள், நீங்கள் வெகுதூரத்தில் இருந்து வந்துள்ளதால் களைப்பாகவும், பசியாகவும் இருக்கும். முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம் என்று தெரிவித்துள்ளனர்.

அதோடு நின்றுவிடாமல் அந்த தாய்க்கு சாதம், சூப், மாமிசம், டீ கொடுத்துள்ளனர். அந்த தாயும் தனக்கு அளிக்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த உடன் அவர் தீவிரவாதிகளை பார்த்து தனது மகனை விடுவிக்குமாறு கேட்டுள்ளார்.

அதற்கு தீவிரவாதிகளோ, உங்கள் மகனை தான் தற்போது சாப்பிட்டீர்கள். அவரை கொன்று, உடலை வெட்டி, கறி சமைத்து உங்களுக்கு கொடுத்தோம் என்று கூறி சிரித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அன்று நம்பர் 1 மாணவி.. இன்று ஐ.எஸ் தீவிரவாதியின் மனைவி (வீடியோ இணைப்பு)!!
Next post திகார் சிறையில் கற்பழிப்பு குற்றவாளியிடம் பேட்டி: போலீஸ் வழக்கு பதிவு!!