கொடைக்கானல் இளம்பெண் கொலையில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!!
Read Time:1 Minute, 14 Second
கொடைக்கானலில் கடந்த மாதம் பாண்டிச்செல்வி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் கற்பழிப்பு முயற்சியில் அந்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் மதுரை நரிமேட்டை சேர்ந்த சம்பத்குமார், சக்திவேல், சிவகங்கையை சேர்ந்த ஜெகதீஸ்பாண்டியன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை நிர்வாகம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தது. அதனை பரிசீலித்த கலெக்டர் ஹரிஹரன் அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
Average Rating