அண்ணாநகரில் பெண்ணிடம் நகைபறிப்பு!!
Read Time:39 Second
புதுக்கோட்டையை சேர்ந்தவர் மீனம்மாள் (42). இவர் சென்னை அண்ணாநகர் வ.உ.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.
நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் மீனம்மாள் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து சென்றனர்.
இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating