புதுவண்ணாரப்பேட்டையில் 10–ம் வகுப்பு மாணவிக்கு பதிவு திருமணம் நடந்ததா?: கடத்தியதாக வாலிபர் கைது!!
புதுவண்ணாரப்பேட்டை வாசர் வரதப்பா தெருவை சேர்ந்த 16 வயது நிரம்பிய 10–ம் வகுப்பு மாணவியை கடந்த 1–ந் தேதி முதல் காணவில்லை.
இது பற்றி அவரது தந்தை புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணபிரபு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாணவியின் செல்போன் எண் மூலம் விசாரணை மேற்கொண்ட போது மாணவி புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி பஸ் நிலைய பகுதியில் இருப்பது தெரிய வந்தது.
போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த மாணவி ராயபுரத்தை சேர்ந்த கணேஷ் என்ற வாலிபருடன் நின்று கொண்டிருந்தார். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது இருவரும் காதலிப்பதாகவும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார்கள்.
இதைக் கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 16 வயது மைனர் பெண்ணுக்கு பதிவு திருமணம் நடந்தது உண்மையா என்பதை கண்டு பிடிக்க சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே மாணவியை கடத்தி சென்றதாக கணேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Average Rating