மயிலம் அருகே உளுந்து பருப்பை சாப்பிட்ட 2 வயது குழந்தை மூச்சு திணறி சாவு!!
Read Time:1 Minute, 21 Second
மயிலம் அருகே நெடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி, விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது வயலில் விளைந்த உளுந்து மற்றும் மொச்சை ஆகியவற்றை தனது வீட்டு வாசலில் காய வைத்து இருந்தார். அப்போது ராஜீவ்காந்தியின் 2 வயது பெண் குழந்தை ஹரிணி காய வைத்திருந்த உளுந்து மற்றும் மொச்சையை எடுத்து சாப்பிட்டாள்.
இதனால் ஹரிணிக்கு வயிறு உப்பசம் ஏற்பட்டு மூச்சு திணறல் உண்டானது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹரிணியின் பெற்றோர் அவளை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ஹரிணி பரிதாபமாக இறந்து போனாள்.
இந்த சம்பவம் குறித்து பெரியதச்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating