பாலியல் குற்றவாளி கொலை – வதந்திகள் பரவுவதை தடுக்க இண்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவை முடக்கம்: நாகலாந்து அரசு!!
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதாகி, நாகலாந்தின் தீமாப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் காரணமாக அம்மாநிலத்தில் பதட்டம் நிலவுகிறது.
இதனிடையே பலாத்கார குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருந்த நபரை கொன்ற வழக்கில் 18 பேர் இன்று அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொல்லப்பட்ட சையத் சரீப் உத்தின்கானின் உடல் சொந்த நகரமான கரீம்கஞ்சிற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. கரீம்கஞ்சில் உத்தின்கான் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இரண்டு நாட்களுக்க மேலாக அப்பகுதியில் நிலவும் பதட்டத்தை திணிக்கும் வகையில், கரீம்கஞ்ச் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும், இண்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவையை முடக்க நாகலாந்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Average Rating