கருங்கல் அருகே பிளஸ்–1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை: டி.வி. பார்த்ததை கண்டித்ததால் விபரீதம்!!

Read Time:2 Minute, 26 Second

512e8e8e-7f14-4ca2-9883-9021429d2799_S_secvpfகருங்கல் அருகே நெடுவிளையைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 52). அரசு ஒப்பந்தத்தாரராக உள்ளார். இவரது மனைவி கலாராணி. இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் பெனிஷா (வயது 16). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.

நேற்று இரவு மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வில்சன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று இருந்தார். அவர், மீண்டும் வீடு திரும்பியபோது மகள் பெனிஷாவை பற்றி விசாரித்தார். அப்போது மாடியில் உள்ள அறையில் பெனிஷா படித்து கொண்டிருப்பதாக தாயார் கூறி உள்ளார்.

இதனால் மகளின் அறைக்கு சென்று பார்த்துள்ளார். கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது பெனிஷா அறையின் உள்ளே மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் தொங்கியது தெரிய வந்தது. உடனே அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பெனிஷாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனால் மகளின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

இதுபற்றிகருங்கல் போலசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

பரீட்சை நேரத்தில் படிக்காமல் டி.வி. பார்த்ததால் பெனிஷாவை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்து பெனிஷா இந்த விபரீத முடிவை எடுத்திருப்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “நீ பார்க்க அசிங்கமாக இருக்கிறாய்”: பதிலால் அசத்திய மாணவி (வீடியோ இணைப்பு)!!
Next post முழுக்க முழுக்க இந்தியப் பெண்கள் இயக்கிய 4 மகளிர் தின சிறப்பு விமானங்கள்!!