வெளிநாடுகளுக்கு இந்திய குழந்தைகளை தத்து கொடுக்கக்கூடாது: பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை!!
Read Time:1 Minute, 5 Second
இந்திய குழந்தைகளை வெளிநாடுகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தத்து கொடுப்பதற்கு வகை செய்யும் சட்டமசோதா பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்டமசோதா மனித வள மேம்பாட்டுக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு விடப்பட்டது.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்தக் குழு திட்டவட்டமாக கூறி உள்ளது.
அது, “எந்தவொரு குழந்தையையும், இந்திய பெற்றோருக்கு தத்து கொடுக்கத்தான் முயற்சி எடுக்க வேண்டும். இந்தியாவில் ஒரு குழந்தைக்கு ஏற்ற தத்து பெற்றோரை கண்டறிய முடியாத சூழ்நிலையில் வேண்டுமானால் இது குறித்து பரிசீலிக்கலாம்” என அது பரிந்துரை செய்துள்ளது.
Average Rating