காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்: பஞ்சாபில் நடந்த கொடூரம்!!
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் 23 வயது பெண் ஒருவர் பேயிங் கெஸ்டாக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் தனது பெண் தோழி ஒருவரைப் பார்த்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று காரில் இடைமறித்து அவரை பலவந்தமாக ஏற்றிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது.
சில மணி நேரங்களுக்கு பின்னர் அதே இடத்தில் அவரை விட்டுச் சென்று அந்த கும்பல் தலைமறைவானது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தற்போது அந்தப் பெண்ணுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக பஞ்சாப் போலிசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating