வேறு ஒரு பெண்ணை 2–வது திருமணம் செய்ய கணவர் முயற்சி: திருநங்கை கண்ணீர் புகார்!!

Read Time:1 Minute, 42 Second

7ffe447c-2505-4143-8c7f-b88626984fb5_S_secvpfஈரோடு பழைய ரெயில் நிலைய பகுதியை சேர்ந்தவர் சிம்ரன் (வயது 28). திருநங்கை.

இன்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு திருநங்கை சிம்ரன் வந்தார். பின்னர் அங்கு மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

எனக்கும், ஈரோடு புதுமை காலனி பகுதியை சேர்ந்தத 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபருக்கும் இடையே 5 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் நாங்கள் இருவரும் முறைப்படி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். ஈரோடு ஆலமரத்து தெருவில் உள்ள முனியப்பன் கோவிலில் என்னை அவர் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் எனது கணவர், வேறொரு பெண்ணை 2–வது திருமணம் செய்ய முயற்சி செய்து வருகிறார்.

இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.

எனவே எனக்கு தாலி கட்டிய கணவரின் 2–வது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது அவரிடம் இருந்து எனக்கு ஜீவனாம்சம் பெற்று தர தாங்கள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் பிடிபட்ட கள்ளக்காதலி காப்பகத்தில் இருந்து தப்பி ஓட்டம்!!
Next post மன உளைச்சலால் தினம்தினம் நரக வேதனையை அனுபவிக்கிறேன்: உபேர் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்!!