பெரியபாளையம் பெண் கொலையில் வாலிபர் கைது!!
பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்காரணை, கோட்டைக்குப்பத்தில் வசித்து வந்தவர் ருக்மணியம்மாள் (வயது72).
வீட்டில் தனியாக இருந்த இவர் கடந்த 2–ந் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளை போய் இருந்தன. இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த ஒரு வாரமாக கொலையாளி குறித்து துப்பு கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையில் கோட்டைக்குப்பம் அருகே உள்ள மேட்டுப்பாளையம், மேட்டுக்காலனியை சேர்ந்த நாகராஜ் (22) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை பிடித்து விசாரித்த போது ருக்மணியம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
நாகராஜ் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–
கடந்த 2010–ம் ஆண்டு ருக்மணியம்மாள் வீட்டில் தின்பண்டம் திருடிய போது அவர் போலீசில் பிடித்து கொடுத்து விட்டார். அப்போது என்னை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
இதனால் ருக்மணியம்மாள் மீது கோபத்தில் இருந்தேன். சீர்திருத்தப்பள்ளியில் இருந்து வெளியே வந்த பின்னர் அவரை பழிவாங்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தேன்.
கடந்த 2–ந் தேதி வீட்டில் தனியாக இருந்த ருக்மணியம்மாளை வெட்டி கொன்றேன். போலீசார் விசாரணையை திசை திருப்ப அவர் அணிந்திருந்த நகையை திருடி சென்றேன்.
இவ்வாறு நாகராஜ் கூறியுள்ளார். அவரிடம் இருந்து 1 பவுன் நகை மீட்கப்பட்டது.
மூதாட்டியை 5 வருடம் காத்திருந்து வாலிபர் பழி வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating