திருப்பதி மருத்துவ கல்லூரி டாக்டர் மீது பெண் டாக்டர் செக்ஸ் புகார்!!

Read Time:2 Minute, 16 Second

7277236e-9289-46ca-9f15-6fac99f6b8fd_S_secvpfதிருப்பதி கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஷ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை (சிம்ஸ்) திருப்பதியில் உள்ளது.

மருத்துவ கல்லூரியில் மைக்ரோ பயோலஜி பிரிவு துறைத்தலைவராக இருப்பவர் டாக்டர் அபிஜித் சவுத்திரி. 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் மீது அதே மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர் திருப்பதி நகர போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:–

டாக்டர் அபிஜித் சவுத்திரி கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு பாலியல் தொல்லை அளித்து வருகிறார். திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார். எனது பேஸ்புக்கிலும் ஆபாசமாக தகவலை தெரிவிக்கிறார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வேறுவழியின்றி போலீசின் உதவியை நாடியுள்ளேன். அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

தனது புகாருக்கான ஆதாரங்களையும் போலீசில் தாக்கல் செய்துள்ளார்.

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ஸ்ரீனிவாஸ் ஆச்சாரி, டாக்டர் அபிஜித் சவுத்திரி மீது 154பி, 509, 67 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து பெண் டாக்டர் கூறும் போது, ‘‘நான் கணவரை விவாகரத்து செய்து தனியாக உள்ளேன். இதை காரணமாக வைத்து டாக்டர் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேருக்கு நேர் மோதிய ஹெலிகொப்டர்கள்: பலியான விளையாட்டு வீரர்கள் (வீடியோ இணைப்பு)!!
Next post 20000 வேலை வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனம்: மகிழ்ச்சியில் மக்கள் (வீடியோ இணைப்பு)!!