கேரளாவில் 2014–ம் ஆண்டு குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதிகரிப்பு!!
கேரளாவில் செயல்படும் கேரள மாநில மகளிர் அமைப்பு உலக மகளிர் தின விழாவையொட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தியது. அப்போது கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் 2014–ம் ஆண்டு அதிகரித்து இருப்பது தெரிய வந்தது.
பெண்கள் மானபங்க வழக்கு 1283 போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளது. அதே சமயம் கற்பழிப்பு வழக்குகள் 4357 பதிவாகி உள்ளது. இதைப் போல பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து 257 வழக்குகள் பதிவாகி உள்ளது.
அதே சமயம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்படாமல் உள்ளதாகவும் அதையும் சேர்த்தால் இந்த குற்றங்கள் மேலும் அதிகரிக்க கூடும் என்றும் மகளிர் அமைப்பு கூறி உள்ளது. எனவே இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர கேரள மாநில அரசும், போலீசும் விரைந்து செயல்பட வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Average Rating