ஒரே வருடத்தில் 108 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை: பாராளுமன்றத்தில் அதிர்ச்சித்தகவல்!!
கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் ராணுவ, மற்றும் விமானப்படையில் பணிபுரியும் 108 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டதாக நேற்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு நேற்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர்
”2014-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி வரை, ராணுவத்தில் பணியாற்றும் 84 பேரும், விமானப்படையில் பணிபுரியும் 24 பேரும் தற்கொலை முடிவை தேடிக்கொண்டனர்” என்றார்.
மேலும் ”நீண்டகால தொடர்வேலை, உள்நாட்டு பிரச்சினைகள், தனிப்பட்ட பிரச்சினைகள், நிதி பிரச்சினைகள், மன உளைச்சல், மற்றும் மன அழுத்தத்தை தாங்க இயலாமை போன்றவையே இது போன்ற சம்பவங்களுக்கு காரணங்கள்.” என்றும் அவர் விளக்கம் தெரிவித்தார்.
உளவியல் ஆலோசனை, யோகா பயிற்சி என்று பணியாளர் தற்கொலையைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Average Rating