தற்கொலை செய்து கொண்ட தம்பதியினரின் மருமகனும் தற்கொலை!!
Read Time:1 Minute, 20 Second
ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட ரவிச்சந்திரன்–உமையாள் தம்பதிக்கு ரமா என்ற மகள் உள்ளார். இவரது கணவர் செந்தில், குறிஞ்சிபாடியில் வட்டி கடை நடத்தி வந்த நிலையில் அவரும் கடன் தொல்லையில் இருந்து வந்துள்ளார். இதனால் பணத்தை கேட்டு அவருக்கு நெருக்கடி அதிகமாகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று செந்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று ரவிச்சந்திரன்–உமையாள் தூக்கு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து ரவிச்சந்திரன் தம்பதி தூக்கில் தொங்கினார்களா? அல்லது அந்த தகவல் கிடைப்பதற்கு முன்பாகவே தம்பதிகள் தங்கள் முடிவை தேடி கொண்டார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating