ஈரோட்டில் சொத்து தகராறில் அண்ணன் மகனை குத்திக் கொன்ற சித்தப்பா!!

Read Time:2 Minute, 24 Second

8dc54f59-5310-474a-8aa0-6b09ead6241f_S_secvpfஈரோடு வளையகார வீதியை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது தம்பி பாபு (வயது 54). இவர் வக்கீல் குமாஸ்தாவாக உள்ளார்.

நந்தகோபாலின் தங்கை விஜயலட்சுமி (52). நந்தகோபாலுக்கும் இவரது தம்பி பாபுவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையொட்டி அவ்வப்போது அவர்கள் இடையே தகராறும் ஏற்பட்டு வந்தது.

அப்பகுதியில் நடந்த கோவில் விழாவில் கலந்து கொள்ள விஜயலட்சுமி தனது மகன் ஞானசேகரனுடன் தனது சகோதரர் பாபு வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது பாபு மற்றும் விஜயலட்சுமி சொத்து பிரச்சினை தொடர்பாக நந்தகோபால் மற்றும் அவரது மகன் சுதர்சன் (26) ஆகியோரிடம் காரசாரமாக பேசியதாக கூறப்படுகிறது. இது தகராறாக மாறியது.

இதில் கடும் ஆத்திரம் கொண்ட பாபு மற்றும் விஜயலட்சுமி இவரது மகன் ஞானசேகரன் ஆகியோர் சுதர்சனை தாக்கினர்.

மேலும் பாபு கத்தியால் தனது அண்ணன் மகன் என்றும் பாராமல் சுதர்சனை குத்தினார். வயிற்றில் கத்திக்குத்து பலமாக பட்டதில் சுதர்சன் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார்.

ஆபத்தான நிலையில் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுதர்சன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சுதர்சனை கொலை செய்த சித்தப்பா பாபு மற்றும் அத்தை விஜயலட்சுமி, இவரது மகன் ஞானசேகரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சொத்து தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரியலூர் அருகே ஆசைக்கு இணங்காத மருமகளை சரமாரியாக தாக்கிய மாமனார் கைது!!
Next post ஏத்தாப்பூரில் குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை!!