நான் செய்த ஒரே தவறு டுவிட்டரில் சுனந்தாவுடன் மோதியது தான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரார்!!
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் பாகிஸ்தான் பத்திரிகை நிருபர் மெஹர் தராரிடம் விசாரணை நடத்தப்படும் என டெல்லி காவல் ஆணையர் பாஸ்சி இன்று தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தரார், போலீசாரின் கேள்விகளை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன். என்னை அவர்கள் தொடர்பு கொண்டு கேள்விகளை கேட்டால் நான் உரிய பதில்களை அளிப்பேன். அதே சமயம் எதற்காக விசாரணைக்கு நான் டெல்லி செல்லவேண்டும் என்று கேள்வியெழுப்பிய தரார், அப்பெண்ணின் மரணத்தில் நான் என்ன செய்திருக்க முடியும் என கேள்வியெழுப்பினார்.
கடந்த ஒரு வருடமாகவே தனக்கும், சசி தரூருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த தரார், தான் செய்த ஒரே தவறு டுவிட்டரில் சுனந்தாவுடன் மோதியது தான் என கூறியது குறிப்பிடத்தக்கது.
Average Rating