போதையில் பெண்ணிடம் ஆபாச சேட்டைகள் செய்த வாலிபர் அடித்துக் கொலை!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் உள்ள ஷாகஞ்ச் பகுதியில் இருக்கும் ஷூ தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர் ஜீட்டு(22).
அருகாமையில் உள்ள தமோலி பாரா பகுதியை சேர்ந்த ஓர் இளம்பெண் தன்னை கடந்து சென்றபோது, முழுபோதையில் இருந்த ஜீட்டு, அவரிடம் ஆபாச செய்கை காட்டியதாக கூறப்படுகின்றது. இவ்விவகாரம் தொடர்பாக தனது பெற்றோரிடம் அந்தப் பெண் கூறியதையடுத்து, இரு சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் புறப்பட்டு சென்ற ஒரு கும்பல், போதையில் இருந்த ஜீட்டுவை சுற்றி நின்று சரமாரியாக தாக்கியது.
இதில் படுகாயமடைந்த ஜீட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கேலிக்குள்ளானதாக கூறப்படும் பெண்ணின் சகோதரர்கள் உள்பட சிலரை தேடி வருகின்றனர்.
சமீபத்தில், நாகலாந்து மாநிலத்தில், கற்பழிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்த கைதியையும் உள்ளூர் மக்கள் அடித்தே கொன்றது நினைவிருக்கலாம்.
Average Rating