செக்ஸ் உணர்வை அதிகளவில் தூண்டும் போதைப்பொருளை விற்பனை செய்த முதியவர் கைது!!

Read Time:2 Minute, 25 Second

295edc91-b9a1-40e1-a3a6-74129483c788_S_secvpfகேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட மதுவிலக்கு போலீஸ் அதிகாரி சதீசுக்கு கல்லடி கோடு பகுதியில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக போனில் ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து சதீஷ் தனது உதவி போலீஸ் அதிகாரிகள் ஜோஸ் மற்றும் முரளிதரன் ஆகியோருடன் சேர்ந்து கல்லடி கோடு பகுதியில் ரோந்து சென்றார். அப்போது ரோட்டோரத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவரை அழைத்து விசாரித்தனர்.

அவர் பெயர் கபீர் (வயது 62) என்று தெரிய வந்தது. அவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். போலீசார் கபீரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவரது ஆடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹாசிஸ் எனப்படும் போதைப் பொருள் 30 கிராம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார் கபீரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:–

ஹாசிஸ் செக்ஸ் உணர்வை அதிகளவில் தூண்டும் போதை பொருளாகும். 10 கிராம் அளவுள்ள ஹாசிஸை ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வந்தேன். இதை பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கே விற்பனை செய்வேன்.

கல்லடிகோடு, நூரணி, கல்மண்டபம், பாலக்காடு பகுதிகளில் உள்ள கல்லூரி வளாகங்களில் அதிக அளவில் விற்பனை செய்து வந்தேன் என்ற கூறினார். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.

கைதான கபீரை போலீசார் பாலக்காடு கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாட்ஸ்அப்பில் அனைவரும் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
Next post திருச்சூர் அருகே பிளஸ்–2 மாணவி தீக்குளித்து சாவு!!