உ.பி.யில் பெண் குழந்தை பிறந்ததால் ஐந்து மாத குழந்தை தலையை துண்டித்து கொலை செய்த கொடூர தாய்!!
உத்தரபிரதேச மாநிலம் ஷகரன்பூரில் உள்ள காங்கோக் என்ற கிராமத்தில் ரீனா என்ற 32 வயதுடைய பெண்மணி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு கடந்த 5 மாதத்திற்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஆண் குழந்தை விரும்பிய ரீனா பெண் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை வளர்க்க அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஈவு இரக்கமின்றி ஐந்து மாத பச்சிளம் குழந்தையின் தலையை துண்டாக்கி அருகில் உள்ள இடத்தில் புதைத்துள்ளார்.
குழந்தை குறித்து மாமனார் கேள்வி எழுப்ப ரீனா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் மாமனார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் இவ்வாறு சம்பவம் நடந்துள்ளதாக ரீனா தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று இந்தியா போராடி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
Average Rating