திருக்கோவிலூர் அருகே மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி: 2 வாலிபர்கள் கைது!!
திருக்கோவிலூர் அருகே மூரார்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவரது மகள் புஷ்பா (வயது 15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு புஷ்பா தனது தோழிகளான பாக்யலட்சுமி, சொர்ணம்மாள் ஆகியோருடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் அருண் (22) மற்றும் இவரது நண்பரான மேல்பட்டை சேர்ந்த அருள் (20) ஆகியோர் புஷ்பாவை வழிமடக்கி அவரை வலுக்கட்டாயமாக அங்குள்ள ஆளில்லாத வீட்டுக்கு தூக்கி சென்றனர். புஷ்பா அலறல் சத்தம் போட்டும் அவர்கள் விடவில்லை. அவர்கள் புஷ்பாவை பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனை பார்த்ததும் பாக்யலட்சுமியும், சொர்ணம்மாளும் ஓடிச்சென்று புஷ்பாவின் தாய் பூங்கொடியிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பூங்கொடி மற்றும் அவரது உறவினர்கள் திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் வாலிபர்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பூங்கொடி திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அருண் மற்றும் அவரது நண்பர் அருள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Average Rating