பொள்ளாச்சி அருகே அரசு பஸ்சில் கண்டக்டருக்கு கன்னத்தில் பளார் அறை!!

Read Time:1 Minute, 35 Second

7eb61450-b78c-4a10-be43-f3da0969536e_S_secvpfபொள்ளாச்சியில் இருந்து எரிசனம்பட்டிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ் புறப்பட்டது. பொன்னாண்ட கவுண்டனூர் வந்த பஸ் அங்கு பயணிகளை இறக்கியது.

அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பஸ்சில் ஏறினார். போதையில் இருந்த அவர் படிக்கட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அவரை பஸ்சின் உள்ளே வந்து இருக்கையில் அமருமாறு கண்டக்டர் சிவசுப்பிரமணியன் கூறினார்.

ஆனால் அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் படிக்கட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். இதனால் கண்டக்டருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் அந்த பயணி ஆத்திரமடைந்து கண்டக்டரின் கன்னத்தில் பளார் என ஓங்கி அறைந்தார். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கோட்டூர் போலீசில் கண்டக்டர் சிவசுப்பிரமணியன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் கண்டக்டரை தாக்கியது அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சரவணன்(வயது 40) என்று தெரியவந்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருக்கோவிலூர் அருகே மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி: 2 வாலிபர்கள் கைது!!
Next post நெல்லை அருகே லாரி டிரைவர் படுகொலை: போலீஸ் விசாரணை!!