மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான தாய்–கள்ளக்காதலன் ஜெயிலில் அடைப்பு!!

Read Time:2 Minute, 45 Second

e752617a-c823-4bcb-bef0-c6186dcff9e0_S_secvpfசுசீந்திரம் அருகே நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (வயது 37). இவருக்கும் தேரூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் செல்வி தனது கணவரை பிரிந்து நல்லூர் பகுதியில் வசித்து வந்தார். அப்போது செல்விக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் முருகன் அடிக்கடி செல்வியின் வீட்டிற்கு வந்து சென்றார். செல்வியின் மூத்த மகள் நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்.

அடிக்கடி செல்வியின் வீட்டிற்கு வந்த முருகன் செல்வியின் மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை செல்வி கண்டிக்கவில்லை. மகளிடம் யாரிடமும் கூற வேண்டாம். சமாளித்து போ என்று கூறி உள்ளார்.

கடந்த 26–ந்தேதியும் முருகன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனை தனது பாட்டியிடம் நடந்ததை கூறி கதறி அழுதார்.

அவர், தனது பேத்தியுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகார் மனு அளித்தனர். எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவை அடுத்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கையர் கன்னி, சப்–இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையை தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முருகன், அவருக்கு உடந்தையாக இருந்ததாக செல்வி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நாகர்கோவில் ஜே.எம்.3 கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முருகன் நாகர்கோவில் ஜெயிலிலும், செல்வி தக்கலை ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர். செல்வியின் மகளை பாட்டியுடன் அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யானைகளால் கன்னி வெடியை கண்டறிய முடியும்: விஞ்ஞானிகள் தகவல்!!
Next post பெண் போலீசிடம் ஆபாச பேச்சு: உதவி கமிஷனர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் பாயுமா?