நாட்டறம்பள்ளி அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி!!

Read Time:2 Minute, 3 Second

98ab7d0b-34b1-48f6-9b28-e01354476b17_S_secvpfநாட்டறம்பள்ளி அருகே உள்ள கேத்தாண்டபட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சார்மி(7) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 3–ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சார்மி வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கூலி தொழிலாளி கருணா(50) என்பவர் வீட்டுக்குள் நுழைந்தார். சின்ன குழந்தை என்று கூட பார்க்காமல் சார்மியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

அவரது மிருகதனமான செயலால் மிரண்டு போன சிறுமி அலறி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டுக்குள் சென்றனர். அப்போது கருணா சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. கிராம மக்களை பார்த்ததும் திகைத்த கருணா அங்கிருந்து தப்பி ஓடினார். பொதுமக்கள் கருணாவை விரட்டி சென்றனர்.

அவர் அதே பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டு ஒளிந்து கொண்டார்.

அவரை விரட்டி சென்ற பொதுமக்கள் கருணா இருந்த வீட்டுக்கு தீ வைத்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் தீயை அணைத்தனர். வீட்டுக்குள் ஒளிந்திருந்த கருணாவை பிடித்து நாட்டறம்பள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கருணாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விளாத்திகுளம் அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!
Next post மதுரை வானொலி நிலையத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் ஊழியர் பிணம்: போலீஸ் விசாரணை!!