காசிமேட்டில் பெண்ணை செல்போனில் படம் எடுத்தவர் கைது!!
Read Time:51 Second
காசிமேடு சிசி காலனியை சேர்ந்தவர் புருசோத்தமன். இவரது மனைவி யுவதி. அதே பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (28). தனியார் நிறுவன ஊழியர். நேற்று மாலை யுவதி அதே பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற கோபிநாத் தனது செல்போனில் யுவதியை படம் எடுத்தார். இதை யுவதி தட்டி கேட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இது குறித்து யுவதி காசிமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் வழக்குபதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தார்.
Average Rating