மேற்குவங்காளத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் 10 பேர் கைது!!
Read Time:1 Minute, 22 Second
மேற்குவங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாப்பூரில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளியில் ஒரு கும்பல் நுழைந்து அங்கிருந்த மூத்த கன்னியாஸ்திரியை கற்பழித்து, பள்ளி அலமாரியில் இருந்த ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கில் சி.ஐ.டி. போலீசார் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த கன்னியாஸ்திரி உடல்நிலை தேறி வருகிறார்.
அந்த பள்ளியில் நேற்று தேர்வுகள் வழக்கம்போல அமைதியாக நடந்தது. பள்ளி கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 4 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். அவர்கள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பள்ளியை நேற்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பார்வையிட்டார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
Average Rating