பாளையில் கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் வெறிச்செயல்!!

Read Time:4 Minute, 4 Second

0050a436-88d0-4bd6-b1d0-86efe3993526_S_secvpfதூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மணக்கரை கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு (வயது32). இவர் சொந்தமாக மினி லாரி வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி பொன் ஈஸ்வரி (27). இவர்களுக்கு முத்து சரளா (9), முத்துமாரி (7), சீதாலட்சுமி (2) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

பொன் ஈஸ்வரி பாளை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதனால் பாளை இந்திரா நகரில் உள்ள தாய் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார்.

அப்போது இந்திரா நகரில் உள்ள பாலமுருகன் என்ற வாலிபருடன், பொன் ஈஸ்வரிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. பாலமுருகன் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் அன்பரசுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனைவியை கண்டித்து, தகராறு செய்தார். இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பொன் ஈஸ்வரி தனது 3 குழந்தைகளையும் அழைத்து கொண்டு பாளை இந்திரா நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

அங்கு கள்ளக்காதல் ஜோடியினர் தங்கு தடையின்றி சந்தித்து வந்தனர். கடந்த 4–ந்தேதி பொன் ஈஸ்வரி, தனது கள்ளக்காதலனுடன் ஊரை விட்டு வெளியூருக்கு ஓடிவிட்டார்.

இதுகுறித்து பொன் ஈஸ்வரியின் தந்தை இசக்கி பாளை ஐகிரவுண்டு போலீசில் மகளை காணவில்லை என்று புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடியை தேடினர். இந்த நிலையில் கடந்த 15–ந்தேதி பொன் ஈஸ்வரி தன்னை யாரும் கடத்தவில்லை என்று போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பொன் ஈஸ்வரியின் கணவர் அன்பரசுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இன்று காலை அவர் தனது மினி லாரியில் அரிவாளை எடுத்துக்கொண்டு, பாளையில் உள்ள மனைவி வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டில் இருந்த குழந்தைகளை வெளியே விளையாட போக சொல்லி விட்டு, மனைவி பொன் ஈஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானாள்.

அலறல் சத்தம் கேட்டு பொன் ஈஸ்வரியின் தாயார் முருகம்மாள் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். அங்கு பொன் ஈஸ்வரி பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர். ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் வெளியேறிய அன்பரசு, நேராக ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளை போலீஸ் உதவி கமிஷனர் மாதவன், இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொன் ஈஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சரண் அடைந்த அன்பரசை கைது செய்தனர்.

மனைவியை கணவனே வெட்டிக்கொன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களக்காடு அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு வலைவீச்சு!!
Next post வேர்க்கிளம்பி அருகே ரூ.25 லட்சத்துக்கு மண்ணுளி பாம்பை விற்பனை செய்ய முயன்ற 2 வாலிபர்கள் கைது!!