ஷேவிங் செய்யும் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு வாலிபர் தற்கொலை!!
Read Time:1 Minute, 18 Second
ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா மாவட்டத்தில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஷேவிங் செய்ய உபயோகப்படுத்தும் பிளேடால் கழுத்தை அழுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேந்திரபாரா மாவட்டத்தின் பெலார்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவ்ராஜ் ரகிதாஸ் (24). தினக் கூலியாக வேலை பார்த்து வரும் அவர் குடும்பத் தகராறு காரணமாக ஷேவிங் செய்யும் பிளேடினால் இன்று தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.
கழுத்து நரம்பு அறுபட்டதால் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating