கன்னியாஸ்திரி கற்பழிப்பு பரபரப்பு ஓய்வதற்குள் மேலும் ஒரு 75 வயது மூதாட்டி கற்பழித்து கொலை!!
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை கான்வென்ட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம கும்பல், அங்கிருந்த 72 வயது கன்னியாஸ்திரியை கற்பழித்தது. இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாஸ்திரியை கற்பழித்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மேற்கு வங்கத்தில் கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என்று மேற்கு வங்க முதல்–மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று மேலும் ஒரு மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. கற்பழிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு 75 வயதாகிறது. விதவையான அவர் ஆசிரமம் ஒன்றில் தங்கியிருந்தார்.
நேற்று அந்த மூதாட்டி சாமி கும்பிட்டு விட்டு திரும்பிய போது மர்ம நபரால் கற்பழித்து கொல்லப்பட்டார். அவரது உடல் ஆசிரமத்துக்கு வெளியில் வீசப்பட்டிருந்தது. போலீசார் அந்த மூதாட்டி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
பிறகு 4 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்ட பரபரப்பு ஓய்வதற்குள் மேலும் ஒரு மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டது மம்தா அரசுக்கு நெருக்கடியை அதிகரிக்க செய்துள்ளது.
Average Rating